close
Choose your channels

மோதல் எதிரொலி: தயாரிப்பாளரை சங்கத்தை பொறுப்பேற்ற தமிழக அரசு

Saturday, April 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கும் ஒரு பிரிவினர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டதால் தற்போது சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுள்ளது. இதனால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் தலைவராக விஷால் வெற்றி பெற்றார். அதில் இருந்தே அவருக்கும் ஒரு பிரிவு தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. சில வாரங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு பூட்டுபோடும் அளவுக்கு அந்த மோதல் முற்றியது

இந்த நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. வணிக வரித்துறை மாவட்ட பதிவாளர் என்.சேகர் என்பவரை தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்பட நிர்வாகிகள் யாரும் இனிமேல் சங்கத்தின் பணிகளில் தலையிட முடியாது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சேகர்தான் முடிவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment