முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றுவோம்: குஷ்புவுக்கு காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Thursday,May 17 2018]

நடிகை குஷ்பு திமுகவில் இருந்தபோது முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்டவர். அதே நிலை மீண்டும் ஏற்படும் நிலையை குஷ்பு உருவாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை விரைவில் மாறும் என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திருநாவுக்கரசர் கூறியபோது, 'தி.மு.க.வில் இருந்தபோது குஷ்பு ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது தமிழக மக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் தெரியும். முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் ராகுல்காந்தியின் நேரடி உத்தரவின் பேரில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?. பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நான் ஜெயலலிதாவையே பார்த்தவன், குஷ்பு எம்மாத்திரம். 2 மாதத்தில் என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கி விடுவதாக குஷ்பு கூறுகிறார். முடியுமா?. அப்படி என்னை பதவியில் இருந்து தூக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய அவர் தயாரா?. சொன்னது நிறைவேறவில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா?. வேண்டாத வேலைகளை, கயிறு திரிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் ஆவேசமாக கூறியுள்ளார்.
 

More News

இந்தியாவுக்கும் கர்நாடகத்திற்கும் இன்று சோக தினம்: முதல்வரின் டுவீட்

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கி வருகிறது.

தனுஷ்-அனிருத் இணையும் படத்தின் அறிவிப்பு எப்போது?

DNA என்ற பெயரில் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகின. 3 படத்தில் தொடங்கிய இந்த கூட்டணி எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி வரை தொடர்ந்தது.

போதை மருந்து கடத்துகிறாரா நயன்தாரா?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரையுலகிற்கு வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம்பர் ஒன் இடத்தை விடாமல் தக்க வைத்து கொண்டிருக்கின்றார்.

தந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவரின் பிளஸ் 2 மதிப்பெண்கள்

தந்தை குடிப்பழக்கத்தால் இம்மாதம் 2ஆம் தேதி நெல்லையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர், பிளஸ் 2 வகுப்புத் தேர்வில் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பிரபல நடிகரை காதலிக்கின்றாரா சூப்பர் சிங்கர் பிரகதி?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரகதி, அதன் பின்னர் தமிழ் திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.