தமிழ்நாட்டில் இடமில்லை: வேற மாநிலத்திற்கு போங்க: கமல், ரஜினியை தாக்கிய முதல்வர்

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர்களின் அரசியல் வருகை, அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தபோது இல்லாத பயம், இந்த இரண்டு பேர்களை பார்த்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் பேசிய அனைவருமே ரஜினி, கமலை விமர்சனம் செய்து பேசினார்கள். அதேபோல் இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கமல், ரஜினி ஆகிய இருவரின் அரசியல் வருகையை விமர்சனம் செய்து பேசினார். அவர் பேசியதாவது:

சில பேர் அரசியலில் புதிது புதிதாக புறப்பட்டுள்ளார்கள். காலி இடத்தை நிரப்ப போகின்றார்களாம். எங்கய்யா காலி இடம் இங்கே இருக்குது. இங்க எல்லாம் புல் ஆயிட்டது, நீங்கள் வேற மாநிலத்திற்கு சென்று பாருங்கள் தமிழ்நாட்டில் இடமில்லை என்று முதல்வர் கூறினார்.

More News

இந்த உலகம் நீங்கள் அழவேண்டும் என்று விரும்பியது: அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தமிழ் மக்களின் அளவு கடந்த பாசம் வியக்க வைக்கிறது: ஹர்பஜான்சிங் நெகிழ்ச்சி

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் கம்பீரமாக மீண்டும் புத்துணர்ச்சியுடன் களம் புகவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்

மது சிகரெட் போல் காபியிலும் எச்சரிக்கை வாசகங்கள்: நீதிமன்றம் உத்தரவு

மது மற்றும் சிகரெட் தயாரிப்புகளில் உடல் நலத்திற்கு தீங்கு என்னும் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல் காபி பொருட்களிலும் எச்சரிக்கை வாசகங்கள் இருக்க வேண்டும் என கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெற்றிமாறனுடன் இணைகிறாரா தளபதி விஜய்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி சேர்ந்த யுவன்ஷங்கர்ராஜா

ஒரே படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைப்பது கோலிவுட் திரையுலகில் புதியது அல்ல. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, எம்.எஸ்,விஸ்வநாதன் - இளையராஜா, போன்றோர் ஒரே படத்தில் பணிபுரிந்துள்ளனர்.