நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்த தமிழக முதல்வர்!!!

 

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை 11 மணி அளவில் அவரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த்தின் ரத்த அழுத்தம் தற்போதும் அதிகமாகத்தான் உள்ளது எனக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் நேற்றைய நிலைமையை ஒப்பிடும்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அந்த மருத்துவக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்றும் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த நிலையில் இன்று மாலை அதற்கான முடிவுகள் கிடைக்கும் எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஹைத்ராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியை செல்போன் மூலமாகத் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் குறித்து விசாரித்து உள்ளார். மேலும் இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவாகள் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

More News

நீட் தேர்வில் வெற்றிப்பெற்று மருத்துவம் பயிலும் 64 வயது சாதனை மனிதர்… கூடவே இன்னொரு டிவிஸ்ட்!!!

ஒடிசா மாநிலத்தில் ஜெய்கிஷோர் பிரதான் என்பவர் 64 வயதில் மருத்துவம் படிக்கிறார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் அவரது இளைய மகளும் பல் மருத்துவம் படிக்கிறார்

ரஜினி, கமலுக்கு கூட்டம் வரும், ஆனால் ஓட்டு வராது: தமிழ் நடிகர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருப்பதால்

செக்ஸ் பொம்மையுடன் திருமணம்… கிறிஸ்துமஸ்க்கு முன்னாடியே இப்படி ஆகிடுச்சே… வருதத்துடன் பதிவு!!!

கடந்த நவம்பரில் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு பாடிபில்டர், தான் பயன்படுத்தி வந்த செக்ஸ் பொம்மையை பலரது முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

வானிலை மட்டுமல்ல, இதிலும் நான் எக்ஸ்பர்ட் தான்: தமிழ்நாடு வெதர்மேனின் சரியான கணிப்பு!

துல்லியமான கணிப்பு: மற்றொரு துறையிலும் காலடி எடுத்து வைத்த தமிழ்நாடு வெதர்மேன்!வானிலை அறிக்கை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ரமணன் அவர்கள் தான்

நேற்று நிழலின் கருமையில், இன்று தேவதை வெள்ளையில்.. கலக்கும் ஜூலியின் போட்டோஷூட்

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களின் ஒருவரான ஜூலி இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ஏற்கனவே பெற்றிருந்த புகழை இழந்தாலும் அதன் பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு