close
Choose your channels

மணிப்பூர் முதல்வரை விட 35 லட்சம் அதிகம் வழங்கிய தமிழக முதல்வர்

Saturday, April 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிப்பூர் முதல்வரை விட 35 லட்சம் அதிகம் வழங்கிய தமிழக முதல்வர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளது. மகளிர் 48 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஒரு தங்கத்தையும், 53 கிலோ பளூதூக்கும் பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதாசானு ஒரு தங்கப்பதக்கத்தையும், ஆண்கள்  77 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஒரு தங்கப்பதக்கத்தையும் பெற்றனர்.

இந்த நிலையில் மீராபாய், சஞ்சிதாசானு ஆகிய இருவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாநில முதல்வர் இருவருக்கும் தலா ரூ.15 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.