18 தொகுதிகள் காலி: தேர்தல் ஆணையத்திற்கு பேரவை செயலாளர் கடிதம்

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை தொடர்வதற்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியாக மனுகொடுத்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியும் ஜக்கையன் எம்.எல்.ஏ தவிர மீதி 18 பேரும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை

இதனையடுத்து இன்று காலை 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். மேலும் சட்டசபை விடுதியை அவர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் காலி செய்தவுடன் அந்த 18 அறைகளுக்கும் சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டது

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக  தேர்தல் ஆணையத்திற்கு பேரவை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில் இருந்து 18 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் 18 பேர்களும் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை செய்துள்ளார். 

இந்த நிலையில் நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள், அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடி முக்கிய ஆலோசனை செய்யவுள்ளனர். அடுத்தடுத்து தமிழக அரசியலில் திருப்பங்கள் ஏற்பட்டிருப்பதால் ஊடகங்களின் பிரேக்கிங் செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

More News

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி'

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய வெங்கட்பிரபுவின் அடுத்த படைப்பான 'பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பிஜீ தீவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

இந்த விஷயம் தோனிக்கும் கோஹ்லிக்கும் தெரிஞ்சா இப்படி செய்வாங்களா?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சென்னை விமான நிலையத்தில் தரையில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது,.

கதவ திறந்தபோதே ஓடியிருக்கலாமே! ஆரவ் புலம்பல்

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி வெளியேறியபோதே தெரிந்துவிட்டது இனிமேல் உள்ள டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்று. இன்று என்ன டாஸ்க் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை,

பிக்பாஸ் 100வது நாளில் ஓவியா: ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா இடையிலேயே மனநிலை காரணமாக வெளியேறிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இன்னும் குறையவே இல்

என் ஹீரோவை பார்த்துவிட்டேன், 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பு

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை நேரில் பார்க்க தமிழகத்தில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கும் நிலையில் கடந்த 33 வருடங்களாக நேரில் பார்க்க வேண்டும்...