கொரோனா பாதிக்கப்பட்ட செய்தியாளர் உயிரிழப்பு....!

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

திருவாரூரில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த, செந்தில்குமார் கொரோனா தொற்றால் காலமானார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. திருவாரூரில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி அருகில் உள்ள ராசப்பன் குடி என்னும் ஊரைச் சார்ந்தவர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் செந்தில்குமார், இவர் மனைவி அனுசுயா. இத்தம்பதிக்கு 3 வயதில் பெண் உள்ள நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் இவர். சென்ற வருடம் கொரோனா நேரத்தில், திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நேர்த்தியாக செய்தியாக்கி வந்துள்ளார் செந்தில்.

இந்தநிலையில் செய்தியாளரான செந்தில்குமாருக்கு கடந்த மாதம், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென சுவாசக்கோளாறு ஏற்பட மருத்துவர்கள் ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சையளித்துள்ளனர். ஆனால் இன்றளவில் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இச்சம்பவம் இதர செய்தியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகத்துறையில் பணிபுரிந்தவர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்தால், தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கும் என அறிவித்திருந்தது. இவரின் குடும்பம் ஏழ்மையானது என்பதால் உடனடியாக நிவாரண தொகையை வழங்கவேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

"தேனிலவே இன்னும் முடியல, அதுக்குள்ளே"....! சர்ச்சை நாயகன் செல்லூர் ராஜா பேச்சு....!

"திமுக-வின் ஆட்சியில் இன்னும் தேனிலவே முடியல, ஆனால் அதுக்குள்ளே ரவுடிசம் தொடங்கியாச்சு" என்ற  செல்லூர் ராஜாவின் பேச்சு புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரபல இயக்குனர் குடும்பத்தினர் 14 பேர்களுக்கு கொரோனா: மன உளைச்சலில் தவித்ததாக டுவிட்!

பிரபல இயக்குனர் ஒருவரின் குடும்பத்தினரை சேர்ந்த 14 பேர்களுக்கும் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த 20 நாட்களாக தான் மன உளைச்சலில் இருந்ததாக

கணவர், குழந்தைகளுடன் விஜய்யின் 'காவலன்' பட நடிகை: 8வது திருமண நாள் கொண்டாட்டம்!

தளபதி விஜய் மற்றும் அசின் நடித்த வெற்றிப் படமான 'காவலன்' திரை படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்தவர் நடிகை நீபா. இந்த படத்தை அடுத்து அவர் ஒருசில திரைப்படங்களிலும்

PBSS பள்ளி விவகாரம்: மதுவந்திக்கு ஜேம்ஸ் வசந்தனின் கோரிக்கை!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து  ஒய்ஜி மகேந்திரன் மகள்

ஊரடங்கு நேரத்தில் 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா செய்த மகத்தான சேவை!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள்