close
Choose your channels

துணி மாஸ்க்கை யூஸ் பண்றீங்களா… கவனிக்க வேண்டிய சில முக்கியமான டிபஸ்!

Friday, August 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து தப்பிக்க தற்போது கொரோனா தடுப்பூசி வந்துவிட்டது. ஆனாலும் மாஸ்க் பயன்படுத்தவதை நிறுத்த முடியாத அளவிற்கு இக்கட்டான சூழல் நீடித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் N95 மாஸ்க்கு பயன்படுத்திவரும் சிலர் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கிறது என்றுகூறி சமீபகாலமாக துணி மாஸ்க்கை பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதோடு இந்தவகை துணி மாஸ்க்குகள் Budget friendlyஆக இருப்பதும் சிலருக்கு பிடித்துப் போய்விடுகிறது. இதனால் துணிவகை மாஸ்க்குகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த துணிவகை மாஸ்க்குகளைப் பயன்படுத்தும்போது சில அவசியமான விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

குறிப்பாக துணிவகை மாஸ்க்குகள் காலாவதியாகி விட்டதா என்பதை கண்டுபிடிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். சில துணிகள் சல்லடைப் போன்று மெல்லிசான நிலைமைக்கு வரும்வரை நாம் காத்திருக்காமல் உடனே அதை மாற்றிவிடுவது நல்லது.

அதேபோல துணிவகை மாஸ்க்குகளை அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். ஒருநாள் முழுக்க ஒரே மாஸ்க்கை பயன்படுத்தினால் அதில் ஈரம் படிந்து, அதுவே எமனாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதை பார்த்து வருகிறோம். அதனால் மாஸ்க் பயன்படுத்துவதை அவசியமாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல ஈரமான மாஸ்க் பயன்படுத்தும்போது கருப்பு பூஞ்சை தொற்று வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. எனவே ஈரமான அழுக்கு படிந்த மாஸ்க்குகளை தவிர்த்து விடுவது நல்லது.

துணி மாஸ்க்கை துவைக்கும்போது சுடு தண்ணீரில் நனைத்து துவைக்க வேண்டும். இதனால் துணியின் ஆயுட்காலம் நீடிப்பதோடு துணியில் படிந்திருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகளையும் ஒழிக்க முடியும்.

துணி வகை மாஸ்க்குகள் மெல்லியதாக இருக்கக்கூடாது. அதேபோல பேஷனுக்காக ஜிகினா கற்களைப் பதித்துக் கொண்டிருப்பதைவிட அடர்த்தியான துணி வகைகளால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கூடவே 3 அடுக்கு பாதுகாப்பு கொண்டதாக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு.

மாஸ்க்கை பயன்படுத்தும்போது துணி இறுக்கமாக இருக்கிறதா? அல்லது சல்லடை நிலைக்கு வந்துவிட்டதா? என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் எலாஸ்டிக் அல்லது பின்பக்க கயிறு அருந்துபோகும் வரை தொடர்ந்து மாஸ்க் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

துணி மாஸ்க்குகள் சில நேரங்களில் வாய், மூக்கு முழுவதையும் மூட முடியாதபடி சிறியதாக கடைகளில் கிடைக்கிறது. இதுபோன்ற சிறிய மாஸ்க்குகளை தவிர்த்து விடுவது நல்லது.

துணி மாஸ்க்குகளை அடிக்கடி மாற்ற மாற்றி பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் எப்போதும் இன்னும் ஒன்றிரண்டு மாஸ்க்குகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த மாஸ்க்குகளை இறுக்கமான கவருக்குள் அழுக்கு படியாதவாறு வைத்து பயன்படுத்த வேண்டும்.

துணியின் தரம் அதாவது நூலிலைகள் நெகிழ்ந்து போய்விட்டால் உடனே அதைத் தூக்கியெறிந்து விடுவது நல்லது. இதுபோன்ற டிப்ஸ்களைப் கவனத்தில் கொண்டு கொரோனா நேரத்தில் கூடுதலான பாதுகாப்புடன் இருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment