ஆடியன்ஸ் வராததால் 'துணிவு' காட்சி கேன்சலா? தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா?

  • IndiaGlitz, [Thursday,January 12 2023]

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் நேற்று வெளியாகிய மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது என்பதும் முதல் நாளுக்குரிய காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரில் வெறும் 17 பேர்கள் மட்டுமே வந்திருந்ததால் ‘துணிவு’ காட்சி ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘துணிவு’ திரைப்படம் தமிழக முழுவதும் நேற்று அதிகாலை 1 மணி காட்சி மற்றும் 4 மணி காட்சி திரையிடப்பட்டது என்பதும் ரசிகர்கள் இந்த காட்சிகளை பார்க்க திரையரங்களில் குவிந்ததால் திருவிழா கூட்டம் போல் இருந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் அரவக்குறிச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் ‘துணிவு’ படம் திரையிடப்பட்ட போது 1 மணி மற்றும் 4 மணி காட்சிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால் 7 மணி காட்சிக்கு மொத்தம் 17 பேர்கள் மட்டுமே பார்வையாளர்கள் வந்திருந்ததால் அந்த காட்சி கேன்சல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நல்ல கூட்டம் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்த பகுதியில் விசாரித்த போது 7 மணி காட்சி திரையிட போவதே பலருக்கு தெரியாது என்றும் 1 மணி மற்றும் 4 மணி காட்சிகள் மட்டும் தான் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவதாக கூறப்பட்டது என்றும் தெரிவித்து வருகின்றனர்.