ராஜஸ்தானில் இருந்து இடம்பெயரும் 'தக்லைஃப்' குழு.. கமல் - சிம்பு காட்சிகள் படமாக்கப்படுவது எங்கே?

  • IndiaGlitz, [Tuesday,April 23 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்தது.

கடந்த சில வாரங்களாக கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார பணியில் இருந்ததால் அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பை மணிரத்னம் நடத்தி வந்ததாகவும் குறிப்பாக ராஜஸ்தானில் கடந்த சில வாரங்களாக சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ‘தக்லைஃப்’ படக்குழுவினர் அங்கிருந்து நேராக டெல்லி சென்று இருப்பதாகவும் அங்கு 20 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் அனேகமாக நாளை டெல்லியில் நடைபெறும் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க கமிட் ஆயிருந்த ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் திடீரென விலகுவதாக தகவல் வெளியான நிலையில் அதன் பிறகு தற்போது அவர்கள் இருவரும் விலகவில்லை, இந்த படத்தில் தொடர்கின்றனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர் இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும் மேலும் அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.