'தக்ஃலைப்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டிலா?

  • IndiaGlitz, [Wednesday,January 31 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்ஃலைப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல படக்குழு தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ரஷ்யா, சைபீரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் செல்ல இருப்பதாகவும் அங்கு பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த படம் முழுவதும் கமல்ஹாசன் தாடியுடன் தோன்றுவார் என்றும் ரஷ்யாவில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு ஆச்சரியமான திரைக்கதையுடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் எடுத்து வரும் நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனஙக்ள் தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பள்ளிக்காதல் படத்திற்கு 'U' சான்றிதழ்? 'மறக்க முடியுமா' படம் குறித்து கவிஞர் தாமரை..!

பொதுவாக பள்ளி குழந்தைகள் காதல் செய்யும் திரைப்படங்கள் என்றால் 'U' சான்றிதழ் தணிக்கையில் தர மாட்டார்கள். இந்த நிலையில் விஜய் டிவி ரக்சன் நடித்த 'மறக்க முடியுமா' என்ற திரைப்படத்தின்

ஒரே ஒரு ட்விட் போட்ட சனம் ஷெட்டி.. பதறியடித்து அக்கவுண்ட்டை காலி செய்த நெட்டிசன்..!

நடிகை சனம் ஷெட்டிக்கு நெட்டிசன் ஒருவர் டீப் பேக் வீடியோ வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததையடுத்து அதிரடியாக போலீஸ் புகார் கொடுப்பதாக அறிவித்தார்.

'கோட்' படம் முடிந்ததும் பிரமாண்டமான மாநாடு.. தீவிர அரசியல் திட்டத்தில் விஜய்.!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' என்ற படத்தில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் தனது அரசியல் நகர்வுகளையும் கவனித்து வருகிறார்.

நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய நடிகர் இளவரசு.. என்ன காரணம்?

 நீதிமன்றத்தில் பொய் சொல்லக்கூடாது என நீதிபதி கண்டித்ததை அடுத்து நடிகர் இளவரசு நீதிமன்றத்தில் இன்று மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

லோகேஷை விட்டு வேறு இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்த ரத்னகுமார் .. என்ன படம் தெரியுமா?

இயக்குனர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இயக்கிய சில படங்களில் ஸ்கிரிப்ட் எழுதுவதில் உதவியாக இருந்த நிலையில் தற்போது லோகேஷ் இயக்கும் அடுத்த படமாக 'தலைவர் 171' படத்தில்  அவர் பணி புரியவில்லை என தெரிகிறது