close
Choose your channels

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் நடிக்கும் 3 ஹீரோயின்கள் யார் யார்?

Sunday, May 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்து வரும் ’மாநாடு’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை விரைவில் அவர் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகிகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் இளம்நாயகன் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டோ, ரியா சுமன் ஆகிய மூன்று நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசை அமைக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ’மாநாடு’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் ஊரடங்கு காலம் முடிவடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment