close
Choose your channels

பிரபாஸ் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்.. அதில் இருவர் தமிழ் நடிகைகளா?

Tuesday, December 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்துள்ள ’சலார்’ விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ‘கல்கி 2898’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றின் தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் யோகிபாபு நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்களில் இரண்டு பேர் தமிழ் திரையுலக நடிகைகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் - மாருதி இணையும் அடுத்த திரைப்படத்தின் நாயகிகளாக நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நிதி அகர்வால், தமிழில் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ ஜெயம் ரவி நடித்த ’பூமி’ உதயநிதி ஸ்டாலின் நடித்த ’கலக தலைவன்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

அதேபோல் நடிகை மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’, விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள ’தங்கலான்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகை ரித்தி குமார் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பாக பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment