இயக்குனர் டீகே'வின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

கடந்த ஆண்டு 'காட்டேரி ' என்ற படத்தின் தொடக்கவிழா நடத்தப்பட்டது. இந்த படத்தில் முதலில் தெலுங்கு நடிகர் ஆதி நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது இந்த படத்தில் இருவரும் இல்லை

வைபவ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிக்க வரலட்சுமி, ஆத்மிகா, மற்றும் சோனம் பாஜ்வா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 

இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஆத்மிகா கூறியபோது, 'இந்த படத்தில் நடிக்கும் மூன்று நாயகிகளுக்கும் சமமான கேரக்டர். யாரும் முதல் ஹீரோயின், இரண்டாவது ஹீரோயின் என்று இல்லை. ஜூன் மாதம் எனது காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டிலும் நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளார்.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை இயக்குனர் டீகே இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'யாமிருக்க பயமே' மற்றும் 'கவலை வேண்டாம்' படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கண்டனம்

நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்ததற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில்

'காலா' ரிலீஸ் தேதி: தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது

26 வயது பெண்ணை காதலிக்கும் 52 வயது நடிகர்

தமிழில் அலெக்ஸ்பாண்டியன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகர் மிலிந்த் சோமன்.

சீமானை போல் பொய் சொல்பவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை: வைகோ

கடந்த சில நாட்களாகவே சீமான் குறித்து வைகோ திடுக்கிடும் புகார்களை கூறி வருகிறார். பிரபாகரனை வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே சீமான் பார்த்ததாகவும்

எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.