பா ரஞ்சித்தின் கேங்ஸ்டர் படத்தில் மூன்று ஹீரோக்கள்.. டைட்டிலே இவ்வளவு ஆக்ரோஷமா இருக்குதே..!

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

பா ரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் இது ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘தங்கலான்’ திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராகி உள்ள நிலையில் இந்த படம் அனேகமாக ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில் பா ரஞ்சித் தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் அசோக் செல்வன் இணைந்துள்ளார் என்றும் அவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் தெரிகிறது. இதனை அடுத்து பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு ’வேட்டுவம்’ என்ற டைட்டிலை பா ரஞ்சித் முடிவு செய்து வைத்திருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.