பாலா-சூர்யா படத்தில் இணையும் 3 பிரபலங்கள்?

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஏற்கனவே நந்தா, பிதாமகன் ஆகிய இரு திரைப்படங்களில் பாலா மற்றும் சூர்யா இணைந்துள்ள நிலையில் இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா சூர்யாவுடன் ஜோடி சேர உள்ளார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் மேலும் மூன்று பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் அதர்வா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.