திருமணமான மூன்றே நாட்களில் புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!

  • IndiaGlitz, [Monday,November 01 2021]

திருமணமான மூன்று நாட்களில் புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம் குறித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவருக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும் கடந்த 28ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு மனோஜ்குமார் மற்றும் கார்த்திகா காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிரே வந்த சிமெண்ட் கலவை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே மனோஜ்குமார் மற்றும் கார்த்திகா உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் கார்த்திகா மற்றும் மனோஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான மூன்று நாட்களில் புதுமண தம்பதிகள் விபத்து ஒன்றில் பலியான சோகம் பலியான சம்பவம் இரு குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.