சென்னையைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழகத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
நியூசிலாந்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய 65 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு தற்போது அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இதேபோல் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்களது உடல்நிலை அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் சென்னையை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
