தூங்காவனம்: கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் கேரக்டர்கள் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,September 29 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளி தினத்தில் இந்த படத்தை வெளியிட 'தூங்காவனம்' படக்குழுவினர் முடிவு செய்திருக்கும் நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட முக்கிய நடிகர்களின் கேரக்டர்களும், அவர்களுக்கு படத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர்களும் தற்போது தெரியவந்துள்ளது.

கமல்ஹாசன் இந்த படத்தில் போதை மருந்து கடத்தலை தடுக்கும் காவல்துறையின் உயரதிகாரியாக சி.கே.திவாகர் என்ற கேரக்டரில் நடிக்கின்றார். த்ரிஷா மற்றும் கிஷோர் ஆகியோர்களும் போலீஸ் அதிகாரிகளாக மல்லிகா மற்றும் மோகன் ஆகிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

இதேபோல் பிரகாஷ்ராஜ், போதை மருந்து வியாபாரம் செய்யும் டீலராக விட்டல் ராவ் என்ற கேரக்டரிலும், பெத்தபாபு என்ற பெயரில் லோக்கல் கேங்க்ஸ்டார் கேரக்டரில் சம்பத்தும் நடிக்கின்றனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் சுகா வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் பாடல்கள் எதுவும் இன்றி சுமார் ஒன்றரை மணி நேர படமாக இருக்கும் என கூறப்படுகிறது.