பிக்பாஸ் ஓடிடியில் இந்த மூன்று போட்டியாளர்களா? இன்னொரு ஆச்சரிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் 2 வாரத்தில் பிக்பாஸ் 5 வது சீசன் நிறைவு பெறப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் ஓடிடி என்ற புதிய நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் 12 அல்லது 13 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் 3 போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வனிதா, அனிதா, ஜூலி ஆகிய மூவரும் இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஐந்து சீசன்கள் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை குறைந்த நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை 70 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


வனிதா, அனிதா, ஜூலி ஆகிய மூவருமே அந்தந்த சீசன்களில் அதிகமாக பேசியதால் நெகட்டிவ் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் மூவரும் இணைந்து கலந்து கொள்ளும் சீசன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நீ வந்ததே வேஸ்ட்: பிரியங்காவை கூறுவது யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நீ வந்ததே வேஸ்ட் என பிரியங்காவை பார்த்து அவரது சக போட்டியாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் தேதி மாறுகிறதா?

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் வரும் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா

இதுவல்லவா போனஸ்… தவறுதலாக 1,300 கோடியை வாரி இறைத்த வங்கி!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வங்கி ஒன்று கிறிஸ்துமஸ்

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? விரைவில் ஹீரோ ஆவாரா?

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு