பிழைப்புக்காக பேருந்து ஓட்டும் முன்னாள் சிஎஸ்கே வீரர்… ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய இலங்கை வீரர் ஒருவர் தற்போது ஆஸ்திரேலிய தெருக்களில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்த புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையின் கிரிக்கெட் அணியில் ஆப்-ஸ்பின்னராக விளையாடி வந்தவர் சுராஜ் ரன்தீப். இவர் இலங்கை அணிக்காக கடந்த 2009 முதல் 2016 வரை பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

அதோடு ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2011 முதல் 2012 வரை விளையாடி உள்ளார். தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பெரிய வாய்ப்பு கிடைக்கப் பெறாமல் பொருளாதாரத்திற்காக ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டும் பணியாளராக இருந்து வருகிறார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகி தற்போது சோஷியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சுராஜ் ரன்தீப்பை போலவே இலங்கையின் மற்றொரு வீரரான சிந்தக நமஸ்தே மற்றும் ஜிம்பாபே அணியின் முன்னணி வீரராக வலம்வந்த வெடிங்டன் வாயெங்கா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பேருந்து ஓட்டுநர்களாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

ராகவா லாரன்ஸ் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று

திரையுலகில் இருந்து விலகுகிறாரா சமந்தா? அதிர்ச்சி தகவல்

நடிகை சமந்தா கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக நடித்து வரும் நிலையில் திரை உலகில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'தி ஃபேமிலிமேன் 2' விவகாரம்: மன்னிப்பு கேட்டார் சமந்தா

பிரபல நடிகை சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன் 2' என்ற வெப்தொடர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்தப் வெப்தொடர் மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும் தெரிந்ததே.

கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த பட ஹீரோ இவரா?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மாறன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

சிம்பு மீதான ரெட் கார்ட் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!

சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் விதித்து இருந்ததை அடுத்து தற்போது அந்த ரெட் கார்ட் மீது தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.