அறம்' படத்தை இதற்காகத்தான் பார்த்தேன்: தொல்.திருமாவளவன் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' படத்திற்கு பாராட்டுக்கு குவிந்து வருகிறது. ரசிகர்கள், திரையுலகினர், விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைது வரும் இந்த படம் அரசியல்வாதிகளை தாக்கும் காட்சிகள் இருந்தாலும், அரசியல் தலைவர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று இந்த படத்தை பார்த்த விடுதலைச்சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது பாராட்டுக்களை படக்குழுவினர்களுக்கு தெரிவித்து கொண்டார்

அறம்' என்ற தலைப்பையும் இயக்குநர் கோபியையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதற்காகவே இந்த படத்தை பார்க்க வந்ததாக கூறிய திருமாவளவன் படம் குறித்து கூறியதாவது:

'அனைவருக்கும் புத்தி சொல்லுகிற அருமையான திரைப்படம். இது அறம் உள்ளவர்களால் ஆய்வுசெய்யப்படுமானால், சர்வதேச அளவில் விருதுகள் பெறுகிற படம். சமூக அக்கறை, மனித நேயம், தன்னம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சாட்டையடி கொடுக்கிறது.

ராக்கெட் விட வேண்டும், இந்த நாட்டை வல்லரசாக்க வேண்டும் என்று துடிக்கிற ஆட்சியாளர்களுக்கு ஆழ்துளை கிணற்றில் விழுகிற குழந்தைகளைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. மனிதநேயம் உள்ள ஜனநாயக சக்திகள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் இந்தப் படத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறவர்கள் அரசியல்வாதிகளுக்கு அடிமைப்பட்டு இருக்க முடியாது என்பதை நயன்தாரா உணர்த்துகிறார். தான் மக்களுக்கு சேவை செய்ய கனவுகளோடு வந்தேன். ஆனால், அரசியல்வாதிகளின் கெடுபிடிக்குள் பணிசெய்யமுடியாத   நெருக்கடிகளை சந்தித்தேன், அடிமைக்கு அடிமையாக வேலை செய்ய விரும்பவில்லை என்று பதவியை உதறி எறிகிறார். இவ்வாறு நறுக்கு தெரித்தாற்போல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

சமூக அக்கறையை ஊட்டும் 'அறம்' மிகச்சிறந்த ஒரு படம். இயக்குநருக்கும் படத்தை துணிந்து தயாரித்த ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள். குத்தாட்டம், சண்டை, காதல் காட்சிகள் என வணிக நோக்கில் எந்தக் காட்சியும் அமைக்கப்படாமல் அனைவரையும் கவரும் படம் 'அறம்' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

More News

நயன்தாராவின் 'அறம்' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி சமூக இணணயதளங்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் என முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

நயன்தாராவுக்கு 100க்கு 100 மார்க்: விக்னேஷ்சிவன் ஆச்சரியம்

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருவதால் நயன்தாரா, இயக்குனர் கோபிநயினார் உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

விக்ரம் மகன் துருவ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

வீடுதேடி வரும் வங்கி சேவை: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

வங்கிகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் காசோலைகள் மற்றும் டிடி ஆகியவற்றுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் இவ்வித சேவைகளுக்காக வங்கி அதிகாரிகள் இனி வீடுதேடி வருவார்கள்

விஜய்சேதுபதிக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர் பாராட்டு

நடிகர் விஜய்சேதுபதி தனியார் சேமியா நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த ரூ.50 லட்சத்தை அப்படியே கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக விளங்கி வரும் அரியலூர் மாவட்டத்திற்கு நன்கொடை அளித்தார்