ராயபுரத்தில் பின்னுக்கு தள்ளிய திருவிக நகர்: மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் சென்னையில் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக சுகாதாரத்துறை திணறி வருகிறது. சென்னையில் மக்கள் தொகை அதிகம் என்ற போதிலும் சென்னை மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதும் சமூக விலகலை பின்பற்றவில்லை என்பதே கொரோனா பாதிப்பு அதிகமாவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக சென்னை ராயபுரத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ராயபுரத்தைவிட திருவிக நகர் கொரோனாவால் அதிக பாதிப்புற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று முன்தினம் வரை 169 பேர்கள் மட்டுமே திருவிக நகரில் கொரோனா பாதித்தவர்கள் இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 41 பேர்கள் அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரத்தில் 199 பேர்களும், தேனாம்பேட்டையில் 105 பேர்களும் கோடம்பாக்கத்தில் 97 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தண்டையார்பேட்டையில் 77 பேர்களும் வளசரவாக்கத்தில் 40 பேர்களும் அம்பத்தூரில் 27 பேர்களும் அடையார் பகுதியில் 20 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கொரோனாவால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 906 என சற்று முன் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இன்று 100 பேர் பாதிக்கப்பட்டால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு மதிப்பளித்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவால் இருந்து மீள முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

உழைப்பால் கிடைக்கும் உயர்வு தாமதமாகலாம், தடைபடாது: கமல்ஹாசனின் மே தின டுவீட்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி மே தின கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் இந்த கொரோனா பரபரப்பிலும் பல நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மே தின கொண்டாட்டம் ஆங்காங்கே

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1793 பேர்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,610 லிருந்து 35,403ஆக அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1793 பேர்கள் கொரோனாவால்

மார்க்கெட்டை மாற்றியும் மாறாத மக்கள்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்தான்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் பழங்கள் மற்றும் பூக்கள் மொத்த விலையிலும் சில்லறை விலையிலும் விற்பனை ஆகி வந்ததால் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது

ரஜினி வசனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்த அஜித்-விஜய் நாயகி

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது

ஒரே நாளில் 22, மொத்தம் 38: கொரோனாவை உற்பத்தி செய்யும் கோயம்பேடு மார்க்கெட் 

கோயம்பேடு மார்க்கெட் கொரோனாவை உற்பத்தி செய்யும் மார்க்கெட்டாக மாற வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள