சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாளை என்னென்ன கொண்டு செல்ல கூடாது?

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு பெரும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நடத்தவிட மாட்டோம் என ஒருசில அரசியல் கட்சிகள் கூறியிருக்கும் நிலையில் நாளை பார்வையாளர்கள் கீழ்க்கண்ட பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று சேப்பாக்கம் மைதான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கொடிகள், பேனர்கள், கமர்ஷியல் லோகோ அடங்கிய போஸ்டர்கள், கைப்பைகள், மொபைல் போன்கள், சூட்கேஸ்கள், பேஜர்கள், ரேடியோ, டிஜிட்டல் டைரி, லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்ரிக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொருட்கள், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி, வீடியோ கேமிராக்கள், ஆகியவை கொண்டு வரக்கூடாது.

மேலும் பட்டாசு, எளிதில் தீப்பற்றும் பொருட்கள், வாட்டர் ஜக், வாட்டர் பாட்டில் ,சிகரெட், பீடி, தீப்பெட்டி, லைட்டர், ரேசர், கத்தரிக்கோல், கண்ணாடி, கத்தி, பேட்டரி,ஆகியவைகள் கொண்டு வரக்கூடாது.

மேலும் உணவு மற்றும் குளிர்பானங்களுக்கும் தடை. மேலும் போட்டியை பாதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவோர் மீது போலீசர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கு ஒப்புக்கொண்டு நிச்சயம் அந்த போட்டியை பார்த்துதான் ஆகணுமா? என்ற எண்ணமே இந்த எச்சரிக்கையை பார்த்தவுடன் அனைவருக்கும் தோன்றுகிறது.

More News

நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனை இழக்கின்றதா சிஎஸ்கே?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் இருவர் . குறிப்பாக கேதார் ஜாதவ் கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியே வெற்றிக்கு வித்திட்டது

ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்த வில்லன் நடிகர்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்

ரஜினியின் ஆலோசனைக்கு தடை போட்ட சேப்பாக்கம் மைதான நிர்வாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நாளை சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்தபோது, தமிழகமே போராட்டக்களத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை ரத்து செய்வது நல்லது

ஜெயலலிதாவின் பதவியை குறிவைத்து காய்நகர்த்தும் சசிகலாபுஷ்பா?

நடிகையாக இருந்த ஜெயலலிதா முதன்முதலில் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கொடுத்த பதவி அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்

சிஎஸ்கே மாஸ்ஸா பண்றாங்க: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பெருமிதம்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.