'தெறி'யில் பஞ்ச் டயலாக்குகள் மற்றும் மாஸ் காட்சிகள் : அட்லி

  • IndiaGlitz, [Saturday,November 28 2015]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அட்லி 'தெறி' படம் குறித்த சில தகவல்களை சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


'தெறி' படம் ஒரு ஆக்சன் படமாக மட்டுமின்றி குடும்ப ஆடியன்ஸ்களும் விரும்பும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என விஜய்யின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பஞ்ச் டயலாக்குகள் மற்றும் மாஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அட்லி கூறியுள்ளார்.

மேலும் 'தெறி' என்ற டைட்டில் இந்த படத்திற்கு புதிய எனர்ஜியை தரும் என்றும் இந்த படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் நாயகிகளான சமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகிய இருவருக்குமே முக்கியத்துவமான கேரக்டர்கள் என்றும் தன்னுடைய படத்தில் நாயகிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும் என்றும் அட்லி கூறியுள்ளார். அட்லியின் முந்தைய படமான 'ராஜா ராணி' படத்தில் நயன்தாரா, நஸ்ரியா இருவருக்குமே அழுத்தமான கேரக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்ஸ்ட் லுக்கில் மூன்று விஜய் தோன்றியிருப்பதால் விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அட்லி, இந்த படத்தில் எத்தனை வேடங்களில் விஜய் நடித்துள்ளார் என்பது சஸ்பென்ஸ் என்றும் அதை வெளியிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அட்லியின் இந்த பேட்டி படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அட்லி கூறியதுபோல் 'தெறி' படம் தெறிக்க வைக்குமா? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

More News

ரஜினிமுருகன்' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட 'ரஜினிமுருகன்' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக...

ஜெமினிகணேசனுக்கு ஜோடியாகும் 'வேதாளம்' நடிகை

கோலிவுட்டின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவா நடித்த 'யான்' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வி அடைந்தாலும்...

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

இயக்குனர் இமயம் இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கடந்த 90கள் முதல் முன்னணி நடிகராக விளங்கிய நவரச நாயகன் கார்த்திக் நேற்று இரவு திடீரென உடல்நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....

தெறியாக தொடங்கிய 'தெறி' வியாபாரம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

இஞ்சி இடுப்பழகி திரைவிமர்சனம்

பாகுபலி, ருத்திரம்மாதேவி என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த பின்னர் வித்தியாசமான கதாபாத்திரத்தை அனுஷ்கா ஏற்று நடித்த படம், ஒரு திரைப்படத்திற்காக எந்த நடிகையும் செய்ய துணியாத உடல் எடை அதிகரித்தலை தைரியமுடன் செய்தவர் என்றெல்லாம் ரிலீஸுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம், எதிர்பார்த்தலை பூர்த்தி செ