'தெறி'காக சொந்தக்குரலில் டப்பிங் செய்த குழந்தை நட்சத்திரம்

  • IndiaGlitz, [Monday,February 29 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான சமந்தா, இந்த படத்திற்காக சொந்தக்குரலில் டப்பிங் பேசி முடித்திருப்பதாக ஏற்கனவே தகவல் வந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய் மகளாக நடித்த நைனிகாவின் டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமந்தாவை போலவே நைனிகாவும் சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் டீசரை அடுத்து 'தெறி' படத்தின் சிங்கிள் டிராக் மற்றும் இசை வெளியீடு அடுத்தடுத்து இருக்கும் என்றும், இந்த படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒன்றரை மாதங்களே இருக்கும் நிலையில் படக்குழுவினர் இரவுபகலாக படத்தின் பணிகளை முடிப்பதில் தீவிரமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.