பல்கேரிய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதிய 'தெறி' விஜய்

  • IndiaGlitz, [Monday,November 30 2015]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக ஏற்கனவே தகவல் வந்ததை அடுத்து தற்போது ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களின் உதவியொடு அதிர வைக்கும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் நடந்து வருவதாக இப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் ஜார்ஜ் வில்லையம்ஸ் தகவல் அளித்துள்ளார்.

'பாகுபலி', 'மிஷன் இம்பாசிபிள் 5' ஆகிய படங்களுக்கு சண்டைப்பயிற்சி செய்த ஹாலிவுட் கலைஞர் Kalayon Vodenincharov மற்றும் திலீப் சுப்பராயன் ஆகியோர்களின் மேற்பார்வையில் பல்கேரியாவில் வந்திருந்த ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் மோதும் காட்சிகள் அதிர வைக்கும் வகையில் படமாக்கப்பட்டதாகவும், இந்த சண்டைக்காட்சி 'தெறி' படத்தை தெறிக்க வைக்கும் என்றும் ஜார்ஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், சத்யராஜ், மகேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

More News

'நேரம்' தெலுங்கு ரீமேக்கில் சந்தானம் நாயகி?

நிவின்பாலி, நஸ்ரியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த 'நேரம்' திரைப்படம் தமிழ், மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனது...

ஐஸ் பக்கெட் சேலஞ்ச் பாணியில் சோனாவின் புதிய முயற்சி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இணையதளங்களில் வைரலாக பரவியது..

வரும் வாரங்களில் வரவுள்ள எதிர்பார்ப்பு மிகுந்த படங்கள். ஒரு பார்வை

கடந்த தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் அஜீத்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி இரண்டு வாரங்கள் பெருவாரியான தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டது....

கபாலியின் பிரமாண்ட மலேசிய திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் முடிவடைந்தது....

ஆக்சன் களத்தில் இறங்கும் ''அங்காடித்தெரு'' இயக்குனர்

அங்காடித்தெரு'', வெயில்'', அரவான்'', காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.....