close
Choose your channels

'தெறி' இயக்குனரின் அடுத்த பட டைட்டில்

Thursday, March 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ராஜா ராணி' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி இரண்டாவது படத்திலேயே இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் அட்லி, தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய 'ஏ ஃபார் ஆப்பிள்' நிறுவனத்தின் முதல் படைப்பில் ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளனர் என்பது நாம் அறிந்ததே.


இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ''சங்கிலி புங்கிலி காத்தவா துரை' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில். ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த வெற்றிப்படமான 'காஞ்சனா' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிதான் இந்த படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்குனர் அட்லி, ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். கமல்ஹாசனிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்த ஹரி இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பழநியில் நடந்து வருகிறது. இந்த படம் குறித்த மேலும் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment