'தெறி' இயக்குனரின் அடுத்த பட டைட்டில்

  • IndiaGlitz, [Thursday,March 10 2016]

'ராஜா ராணி' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி இரண்டாவது படத்திலேயே இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் அட்லி, தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய 'ஏ ஃபார் ஆப்பிள்' நிறுவனத்தின் முதல் படைப்பில் ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளனர் என்பது நாம் அறிந்ததே.


இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ''சங்கிலி புங்கிலி காத்தவா துரை' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில். ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த வெற்றிப்படமான 'காஞ்சனா' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிதான் இந்த படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்குனர் அட்லி, ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். கமல்ஹாசனிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்த ஹரி இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பழநியில் நடந்து வருகிறது. இந்த படம் குறித்த மேலும் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிகிறது.

More News

விஜய் ரசிகர்களின் ரிங்-டோனாக மாறுமா 'அதரவைப்போம்' பாடல்கள்?

இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கரும், விஜய் இளைஞர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியுமான ஜான் விக்னா என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து 'அதரவைப்போம்'...

'பாகுபலி'க்கு இணையாகுமா 'காஷ்மோரா'?

இனிமேல் தமிழ் சினிமாவில் போர்க்காட்சிகள் இடம்பெறுகிறது என்ற செய்தி வெளிவந்தால் உடனே அனைவருக்கும் 'பாகுபலி' போர்க்காட்சிகள்...

இன்று பூஜை. நாளை ரிலீஸ். விஜய்சேதுபதியின் லக்கி நாட்கள்

'நானும் ரெளடிதான்', சேதுபதி என இரண்டு ஹிட் படங்களில் நடித்த விஜய்சேதுபதியின் அடுத்த படமான 'காதலும் கடந்து போகும்' திரைப்படம்...

இன்று ஒரே நாளில் மூன்று 'வி' நடிகர்கள் படங்களின் பூஜை

இன்று ஒரே நாளில் விஜய்சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை', விஷாலின் 'துப்பறிவாளன்' ஆகிய இரண்டு படங்களின் பூஜை நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

பிரபல இயக்குனருக்கு பிடிவாரண்ட் உத்தரவு

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் மற்றும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது....