தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

திரையுலகினர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்த இணையதளத்தை அசைக்க முடியவில்லை.

சர்கார், 2.0 போன்ற பெரிய பட்ஜெட் படங்களை முன்கூட்டியே சவால் விட்டு இணையதளத்தில் ஒளிபரப்பி வரும் தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசின் சட்டங்களும் நீதிமன்றத்தின் உத்தரவும் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது என்றும், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து வந்தால் மட்டுமே முடியும் என்றும் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் திருட்டு விசிடியை ஒழிக்க தனி சட்டம் உள்ளதாகவும், அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

என்னை நம்பாக கெட்டவங்க நிறைய பேரு : 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டிரைலர் விமர்சனம்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமலுக்கு மூளையில் கோளாறு: அமைச்சர் செல்லூர் ராஜூ

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலை விட அதை வைத்து அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் கொடூரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.

மரண மாஸ் தலைவர் குத்து: 'பேட்ட' சிங்கிள் குறித்து கார்த்திக் சுப்புராஜ்

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இது என்ன 3 மணி நேர திரைப்படமா? கமல்ஹாசனுக்கு அமைச்சர் கேள்வி

கமல்ஹாசனுக்கு அனுபவம் கிடையாது. 3 மணிநேர திரைப்படம் போலவே உடனடியாக கிளைமேக்ஸ் காட்சி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை: இயக்குனர் ரஞ்சித்

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ரஞ்சித், 2வது படமான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார்.