இந்த கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய போறேன்: த்ரிஷா


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் சினிமாவில் இதுவரை ஜெய்சங்கர் காலத்தில் இருந்து எத்தனையோ துப்பறிவாளர் படங்கள் வந்துள்ளது. ஆனால் முதல்முறையாக ஒரு பெண் துப்பறிவாளர் படம் விரைவில் தயாராகவுள்ளது.
'குற்றப்பயிற்சி' என்ற டைட்டிலில் தயாராகும் இந்த படத்தில் த்ரிஷா பெண் துப்பறிவாளராக நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட் சந்தித்த ஒரு வழக்கு குறித்த இந்த படத்திற்காக, தான் நிறைய ஹோம் ஒர்க் செய்யவுள்ளதாகவும், இந்த கேரக்டருக்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொண்டே படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் த்ரிஷ கூறியுள்ளார்.
மேலும் இந்த வாரம் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணி தொடங்கலாம் என்றும், வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த படத்தில் ப்ரியாமணி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளது குறித்த செய்தி குறித்து கூறிய த்ரிஷா, 'இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் யாரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை' என்று கூறினார். மேலும் இந்த படத்தில் தன்னுடைய லுக், இதுவரை இல்லாத வகையில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று த்ரிஷா கூறியுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments