இந்த கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய போறேன்: த்ரிஷா

  • IndiaGlitz, [Saturday,February 03 2018]

தமிழ் சினிமாவில் இதுவரை ஜெய்சங்கர் காலத்தில் இருந்து எத்தனையோ துப்பறிவாளர் படங்கள் வந்துள்ளது. ஆனால் முதல்முறையாக ஒரு பெண் துப்பறிவாளர் படம் விரைவில் தயாராகவுள்ளது.

'குற்றப்பயிற்சி' என்ற டைட்டிலில் தயாராகும் இந்த படத்தில் த்ரிஷா பெண் துப்பறிவாளராக நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட் சந்தித்த ஒரு வழக்கு குறித்த இந்த படத்திற்காக, தான் நிறைய ஹோம் ஒர்க் செய்யவுள்ளதாகவும், இந்த கேரக்டருக்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொண்டே படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் த்ரிஷ கூறியுள்ளார்.

மேலும் இந்த வாரம் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணி தொடங்கலாம் என்றும், வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த படத்தில் ப்ரியாமணி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளது குறித்த செய்தி குறித்து கூறிய த்ரிஷா, 'இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் யாரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை' என்று கூறினார். மேலும் இந்த படத்தில் தன்னுடைய லுக், இதுவரை இல்லாத வகையில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று த்ரிஷா கூறியுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது

More News

நான் இதை எதிர்பார்க்கவே இல்லை: ரஜினி குறித்து அனுஷ்கா

நடிகை அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பாகமதி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகிறது.

இசைஞானியை இளம் அரசியல் தலைவர் சந்தித்தது ஏன் தெரியுமா?

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சமீபத்தில் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து இந்த விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சீனாவில் இரண்டே வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்த இந்திய திரைப்படம்

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்தது.

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

மீண்டும் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தீவிர அரசியலில் இறங்கி 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார்