காதல் ஜோடி கொலை வழக்கு: கொலையாளிக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 16 2019]

8 ஆண்டுகளுக்கு முன் காதல் ஜோடியை கொலை செய்த குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தூக்குதண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே கடந்த 2011ஆம் ஆண்டு கல்லூரி மாணவி கஸ்தூரியும் அவரது காதலர் எழில் முதல்வன் என்பவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை குறித்து விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார், திவாகர் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில் கஸ்தூரியை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் காதலர் இருவரையும் திவாகரன் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கு சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் இறுதியில் திவாகருக்கு தூக்குதண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து திவாகரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது,. சென்னை ஐகோர்ட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட், திவாகரனின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பின்படி ஏப்ரல் 22ஆம் தேதி திவாகரனுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படவிருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

மீண்டும் பாட வந்த காந்தக்குரல் பாடகர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகரும் காந்தக்குரலார் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கே.ஜே.ஜேசுதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்தில் பாடியுள்ளார்.

இந்த அரசியல் நாகரீகம் தமிழகத்திற்கு எப்போது வரும்?

தமிழகத்தில் திராவிட அரசியல் கட்சிகள் காலூன்றிய பின்னர் எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகள் போல் பார்ப்பதும், ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும்

ரூ.75 லட்சம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன்: தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் மிரட்டல்

தேர்தல் செலவுக்காக ரூ.75 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன் என தேர்தல் ஆணையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கமல்ஹாசனை குறி வைத்து அடிக்கும் கரு.பழனியப்பன்?

கடந்த சில நாட்களாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம்  செய்து வரும் இயக்குனர் கரு.பழனியப்பன், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது

மாம்பழமா? மாபெரும் பழமா? யாருக்கு ஓட்டு குறித்து பார்த்திபன் பதிவு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது.