திரையரங்க வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்: நாளை முதல் இயங்கும் என அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

சென்னை தவிர தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் கடந்த 16-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வந்ததால் திரையங்குகள் இயங்கவில்லை. இந்த நிலையில் இன்று மாலை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், திரையரங்கு உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

அரசு அதிகாரிகளின் உத்தரவாதத்தை அடுத்து நாளை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் இயங்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவில் மாற்றம் இல்லாததால் ஏற்கனவே ரிலீசான படங்கள் மட்டுமே மீண்டும் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இது இயலாமை அல்ல; இழிவான அரசியல்: மத்திய அரசை போட்டுத்தாக்கும் கமல்

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சுணக்கம் காட்டி வருவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்து வருகின்றன

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் திருமண நாள் கொண்டாட்டம்

இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது திருமண நாளை நேற்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடினார்.

அடுத்த படம் குறித்து ராஜமெளலியின் அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஜமெளலியின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில் தற்போது ஒரு சிறு வீடியோ மூலம் தனது அடுத்த படம் குறித்த தகவல்களை ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

சக நடிகர்களுக்கு ஜாக்கிசான் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

ஜாக்கிசான் நடித்த 'குங்பூ யோகா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய நடிகர்களுக்கும் மேலும் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் ஜாக்கி சான் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிவகார்த்திகேயன் படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் நடிகைகள்

ரஜினியின் 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா' பாடல் மூலம் பெரும்புகழ் பெற்ற அருண்காமராஜ், முதன்முதலில் இயக்கும் படம் ஒன்றை சிவகார்த்திகேயன் தயாரிக்கின்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்