ஓடிடி விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Tuesday,February 20 2024]

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார், இந்த பேட்டியில் அவர் கூறிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

இந்தி படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகு தான் ஓடிடியில் வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவிலும் இனிமேல் ஓடிடி வெளியீட்டை 8 வாரமாக மாற்ற வேண்டும்

திரையரங்குகளுக்கு உள்ளாட்சி வரி 8 சதவீதம் விதிக்கப்படுவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

அதேபோல் பிற மாநிலங்களில் திரையரங்குகளில் கிரிக்கெட், ஃபுட்பால் போன்றவற்றை ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது போல், தமிழகத்திலும் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி அளிக்க வேண்டும்.

திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைப்பது குறித்து தயாரிப்பாளர்களும் பேசி முடிவெடுப்போம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்க தயார். ஆனால் சிறு படங்களை பார்க்க மக்கள் வருவதில்லை.

தமிழகத்தில் உள்ள 1168 திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பது புகார் உள்ளது. ஆனால் மற்ற திரையரங்குகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த தீர்மானங்கள் காரணமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

பாடலாசிரியர் சினேகன் அளித்த புகார்.. தமிழ் நடிகை அதிரடி கைது..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஷ்பு ஏன் அமைதியாக இருக்கிறார்? கூவத்தூர் விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் கேள்வி..!

அதிமுகவில் இருந்து விலகிய ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த

கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது: த்ரிஷாவின் பதிவு..!

கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது என்று நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கோலிவுட்டில் ஒரு புதிய 'ஸ்டார்' நடிகை..  மேகா ஷெட்டிக்கு குவியும் ஆதரவு..!

தனது நேர்த்தியான வசீகரத்தாலும் பன்முகத் திறனாலும் பார்வையாளர்களைக் கவரும் திறன் கொண்ட நடிகைகள் மிகக் குறைவு. அப்படியான நடிகைகள் திரையில் பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன்

விவாகரத்துக்கு பின் அரசியல்.. மணிரத்னம் பட நடிகையின் தாயார் தகவல்..!

மணிரத்னம் படத்தில் நடித்த நடிகை விரைவில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றபின் அவர் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக அவரது தாயார் பேட்டி அளித்துள்ளார்.