close
Choose your channels

ஓடிடியில் திரைப்படம் வெளியிட்டால் எங்களுக்கு பங்கு வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை..!

Tuesday, July 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிட்டால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்கு வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் சில தீர்மானங்களை இயற்றப்பட்டுள்ளன. அது குறித்து பின்வருமாறு.

* புதிய திரைப்படங்கள் வெளிவந்து 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் திரையிட வேண்டும்.

* ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழிந்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும்.

* புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% தான் பங்கு தொகை கேட்க வேண்டும்.

* திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும்போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்கிற்கு அளிக்க வேண்டும்.

அரசுக்கு விடுத்த கோரிக்கைகள்

* திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.

* திரையரங்குகள் வர்த்தகம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

* மின்சார கட்டணங்கள், சொத்துவரி ஆகியவை திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவணம் செய்ய வேண்டும்.

* ஏற்கனவே கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறு பரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment