25 தோசை சாப்பிட்டு 'நீயா நானா' மூலம் பிரபலமான இளைஞர்.. ரயிலில் அடிபட்டு பரிதாப மரணம்..!

  • IndiaGlitz, [Monday,April 08 2024]

விஜய் டிவியில் கோபிநாத் நடத்தி வரும் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் தனது மகன் 25 தோசை சாப்பிடுவான் என்று ஒரு பெண் பெருமையாக பேசி இருந்த நிலையில் அந்தப் பையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் ’நீயா நானா’ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ’தோசை சாப்பிட வேண்டிய உணவு’ என ஒரு தரப்பு, ’தோசை ஒரு சாதாரண உணவு’ என்று இன்னொரு தரப்பு விவாதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒரு இளம் பெண் தனது அண்ணன் விதவிதமாக தோசை சாப்பிடுவார் என்றும் தன்னையே சுடச் சொல்வார் என்றும் கூறிய நிலையில் தனது மகனுக்கு அவரது அம்மா சப்போர்ட் செய்து பேசினார். தனது மகனுக்கு தோசை என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், 25 தோசை சாப்பிடுவார் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த குடும்பம் பிரபலமான நிலையில் சில யூடியூப் சேனல்களுக்கும் இவர்கள் பேட்டி அளித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தோசை சாப்பிடும் பிரணவ் தற்போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை அவர் மொபைல் போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்து போகின்ற போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் உயிரிழந்தார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ள நிலையில் நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More News

சேலை ஜாக்கெட் அணிந்து மாஸ் ஆக்சன்.. அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' டீசர்..!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை

அது ஃபேக் புகைப்படம், யாரும் கவலைப்பட வேண்டாம்.. நடிகர் ஜாக்கிசான்

நடிகர் ஜாக்கிசான் அவர்களுக்கு தற்போது 70 வயதாகும் நிலையில் சமீபத்தில் அவரது வயதான தோற்றத்தை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கமல், ரஜினி ஆகியோர்களுக்கும் 70

33 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் 'தளபதி' ஜோடி? இந்த படத்திலாவது இணைத்து வைங்கப்பா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' திரைப்படத்தில் நடித்த நடிகை மீண்டும் ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் சார்.. நீங்கள் கட்சி ஆரம்பித்துவிட்டீர்கள், அதனால் இதை கண்டிப்பாக செய்யுங்கள்: இயக்குனர் பேரரசு..

தளபதி விஜய் சார் அவர்களே, நீங்கள் அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் இதை கண்டிப்பாக செய்யுங்கள் என இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து

நயன்தாரா வீட்டு மொட்டை மாடியில் நனவாகிய கனவு.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை நயன்தாரா தனது வீட்டின் மொட்டை மாடியில் புதிய அலுவலகத்தை கட்டி உள்ள நிலையில் தனது கனவு நனவாகியுள்ளதாக புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.