புது காதலிக்காக… மனைவியை கொன்று தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்ட கணவன்!

  • IndiaGlitz, [Monday,February 14 2022]

பிரேசில் நாட்டில் புதிதாகச் சந்தித்த தோழி ஒருவருக்காக தனது மனைவியை கொன்று தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்ட கணவன் சிறை தண்டனை பெற்றுள்ளார். ஆனாலும் சிறையில் இருந்து தப்பித்து அவர் செய்த காரியம் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரேசில் நாட்டில் வசித்துவந்த மௌரே சம்பீட்ரி என்ற 59 வயதான நபர் புதித்தாகச் சந்தித்த தனது தோழியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் இதற்கு அவருடைய மனைவி Claudete sampietri தடையாக இருப்பாரோ என நினைத்த அவர் கடந்த 2017 இல் மனைவியைக் கொலைசெய்து வெளியே தெரியாமல் இருப்பதற்காக கூறுபோட்டு தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்டு இருக்கிறார்.

இதையடுத்து மனைவி காணாமல் போன வழக்கில் சிக்கிய மௌரேவிற்கு 21 வருட சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டு சோகத்தில் இருந்த மௌரே அங்கிருந்து தப்பித்து தனது காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இப்படியே காவல்துறையிடம் இருந்து தப்பித்து வாழ்ந்துவந்த மௌரே தற்போது 5 வருடம் கழித்து கடந்த மாதம் போலீசிடம் சிக்கியுள்ளார்.

காதலிக்காக கொலையும் செய்து , பின்னர் சிறையில் இருந்து தப்பித்து காதலியை கரம்பிடித்த மௌரேவைப் பார்த்து பலரும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதைத்தான் காதலுக்கு கண்ணில்லை என்பார்களோ? என்று கிண்டல் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

முதல் லாட்டரியிலேயே 35 கோடி ரூபாய் பரிசு… மகிழ்ச்சியில் இளம்பெண்!

இங்கிலாந்து நாட்டில் கணவர் ஒருவர் பல வருடங்களாக லாட்டரி

காஜல் அகர்வாலின் அடுத்த தமிழ்ப்படத்திற்கு 'யூ' சான்றிதழ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ள அடுத்த தமிழ் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஹன்சிகா படத்தை தொடங்கி வைத்த விஜய்சேதுபதி: வைரல் புகைப்படங்கள்!

நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

குறைந்த விலையில் தட்டித்தூக்கிய தரமான வீரர்கள்: தோனியின் மாஸ்டர் பிளான்!

2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடந்த நிலையில் தோனியின் மாஸ்டர் பிளானால் குறைந்த விலையில் தரமான வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது

சின்னத்தல ரெய்னா இல்லாத ஐபிஎல் தொடர்: அதிருப்தியில் ரசிகர்கள்!

தோனியை தல என்று ரசிகர்கள் அன்புடன் அழைப்பது போல் சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்றுதான் ரசிகர்கள் அழைத்து வந்தனர். அப்படி ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய வீரரான சுரேஷ் ரெய்னா