கார்த்தியின் 'கைதி' படத்தின் டெர்ரர் லுக்

  • IndiaGlitz, [Friday,March 08 2019]

தேவ் படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ஒரு த்ரில் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின், ரொமான்ஸ், டூயட் இல்லாத இந்த படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது

இந்த படத்தில் கார்த்தி கைதி வேடத்தில் நடித்திருப்பதாகவும், இதனால் இந்த படத்தின் டைட்டிலும் 'கைதி' என்றும் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் கார்த்தியின் 'கைதி' படத்தின் டெர்ரர்லுக் வெளியாகியுள்ளது. இந்த வித்தியாசமான லுக்கே இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்வதாக கூறப்படுகிறது.

ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கத்திலும் கார்த்தி நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

ஒருமையில் பேசிய பிரேமலதாவுக்கு செய்தியாளர்கள் கடும் கண்டனம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று ஆரம்பத்தில் இருந்தே குழப்பத்தில் இருந்த தேமுதிக, எந்தவித கொள்கைப்பிடிப்பும்

சூர்யாவின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்?

'என்.ஜி.கே' படத்திற்கு பின்னர் சூர்யா நடித்து வரும் 'காப்பான்' திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி என ஒரு நட்சத்திர கும்பலே உள்ளது

மெகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', தளபதி விஜய் நடித்த 'சர்கார்' உள்பட பல மெகா பட்ஜெட் படங்களை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின்

தாறுமாறு தலைவரே... வேற லெவல்: சிவகார்த்திகேயனை பாராட்டிய காமெடி நடிகர்!

சிவகார்த்திகேயன் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து தற்போது அவர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை: ஓவர்டைம் வேலை செய்யும் இயக்குனர்!

அஜித் நடித்து வரும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.