இறந்த தாயின் உடலை ஜன்னல் வழியே பார்த்து அழுத இளைஞர்: மனதை உருக்கும் புகைப்படம்

கொரனோவால் இறந்த தாயை அருகே சென்று பார்க்க அனுமதி கிடைக்காததால் ஜன்னல் வழியே பார்த்த இளைஞர் ஒருவரின் புகைப்படம் மனதை உருக்கும் வகையில் உள்ளது.

பாலஸ்தீன நாட்டில் உள்ள 73 வயது பெண் கொரனோவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்., அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் ஜிகாத் என்பவருக்கு மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் ஜன்னலின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு தனது தாயாரை அந்த ஜன்னல் வழியாக கடந்த சில நாள்களாக பார்த்து வந்தார். இந்த நிலையில் திடீரென தனது தாயார் இறந்து விட்டதாக செய்தி அறிந்து கதறி அழுதார்.

இருப்பினும் கொரனோவால் இறந்த தாயின் உடலைக்கூட பார்க்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தாயாரை ஜிகாத் அருகில் இருந்து பார்த்தால் அவருக்கும் கொரோனா பரவும் என்ற அச்சத்தால் அவருக்கு அனுமதி அளிக்காததால் அதிர்ச்சி அடைந்த ஜிகாத், மீண்டும் ஜன்னல் மேல் ஏறி உட்கார்ந்து தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.

பெற்ற தாயின் இறந்த உடலைக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவது குறித்த குறித்த இந்த புகைப்படத்தை பலர் இதயத்தைக் கல்லாக்கிக் பார்த்து வருகின்றனர்.

More News

கொரோனா நேரத்தில் தயாரிப்பாளர் ஐசரிகணேஷின் அதிரடி அறிவிப்பு

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஒரு கல்வியாளர் என்பதும், அவரது கல்வி நிலையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

20 வருடங்கள் உயிருக்கு போராடிய மணிரத்னம் பட நடிகை: தயாராகிறது திரைப்படம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றித் திரைப்படம் 'திருடா திருடா'. பிரசாந்த் மற்றும் ஆனந்த் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஹீரா நாயகியாக நடித்திருந்தார்

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்படுகிறதா? போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதால் தமிழகம் முழுவதும் முருக பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பீட்டர்பாலின் விவகாரத்தில் திடீரென நுழையும் இன்னொரு பெண்: தயாரிப்பாளர் ரவீந்தரின் திடுக்கிடும் தகவல்

வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதும் வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்

பயந்துட்டியா குமாரு: வனிதாவை கிண்டல் செய்யும் கஸ்தூரி

வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது குறித்து நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட ஒரு சில நடிகைகள் தங்களுடைய கருத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார்கள்.