கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நடிகை இவர்தான்!

  • IndiaGlitz, [Tuesday,July 19 2022]

கள்ளக்குறிச்சி சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சமீபத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவிக்காக ஒரே ஒரு தமிழ் நடிகை மட்டும் தனது சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் சமூக பிரச்சனைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடிகர் நடிகைகள் குரல் கொடுக்கும் வழக்கம் இருந்தது. குறிப்பாக சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல்துறையால் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு பல திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் சமீபகாலமாக சமூக பிரச்சனை எழும்போது சினிமா நட்சத்திரங்கள் அமைதியாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கான்யாபூர் என்ற பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இந்த மரணம் குறித்து அனைத்து ஊடகங்களும் சமூக வலைதளங்களும் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரு நட்சத்திரம் கூட இந்த மாணவிக்காக குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து மரணமடைந்த மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நட்சத்திரம் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். நடிகையாவதற்கு முன்னர் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்ததால் அவருக்கு சமூக அக்கறை இயல்பாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

குளோஸ் அப் பிகினி புகைப்படம் : ரசிகர்களை கிளாமரில் மிரட்டும் விஜய் பட நடிகை!

விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளோஸ் அப் பிகினி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

பார்த்திபனின் அடுத்த வித்தியாசமான முயற்சி: இதுவும் உலகின் முதல்முறையா?

'புதியபாதை' படம் முதல் பார்த்திபனின் அனைத்து படங்களுமே வித்தியாசமாக இருக்கும் என்பதும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவர் எடுத்து வரும் திரைப்படங்கள் தனித்துவமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சிம்பு-அருள்நிதி மோதல்: ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு

இந்த வாரம் சிம்பு மற்றும் அருள்நிதி திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செருப்பு மாலை போட்ட பார்த்திபன் ரசிகர்கள்: புளூசட்டை மாறன் கமெண்ட் என்ன தெரியுமா?

பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படத்தை விமர்சனம் செய்த புளூசட்டை மாறனின் உருவ பொம்மைக்கு பார்த்திபனின் ரசிகர்கள் செருப்பு மாலை போட்ட நிலையில்

காலையில் பாசிட்டிவ், மாலையில் நெகட்டிவ்: மணிரத்னம் கொரோனா செய்தியால் பரபரப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இன்று காலை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.