டீ குடிக்க போனேன்: கொரோனா வார்டில் மாயமானவரின் அதிர்ச்சி பதில்

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று காலை திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டபோது டீ குடிக்க கடைக்கு சென்றேன்’ என்று சர்வசாதாரணமாக பதில் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பள்ளிக்கரணையைச் சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் கடந்த 29-ம் தேதி கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென கொரோனா வார்டில் இருந்து அந்த முதியவர் மாயமானார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கண்டுபிடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாயமான முதியவர் சிலமணி நேரத்தில் அவராகவே கொரோனா வார்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரிடம் விசாரணை செய்தபோது ‘டீ குடிக்க போனதாகவும், டீக்கடை எதுவும் இல்லை என்பதால் திரும்பி வந்துவிட்டதாகவும் சர்வசாதாரணமாக கூறியது போலீசாரையும், மருத்துவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் சர்வசாதாரணமாக டீக்குடிக்க வெளியில் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் போன்ற நபர்களால் தமிழகம் கொரோனாவுக்கு இன்னும் அதிக விலை கொடுக்கும் என அஞ்சப்படுகிறது

More News

18 வயது இளைஞனின் நிறுவனத்தில் 50% முதலீடு செய்த ரத்தன் டாட்டா

18 வயது இளைஞர் ஒருவர் ஆரம்பித்த பார்மா நிறுவனத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா தனது சொந்த பணத்தை முதலீடு செய்துள்ளார்

படுக்கையறையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட மீராமிதுன்: வைரல் வீடியோ

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோக்களை வெளியிடுவதும், அவரது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள்

டாஸ்மாக்கை அடுத்து கோவில்களையும் திறக்க அரசு அதிரடி முடிவு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் மத்திய அரசும் மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவில் சிலர் தளர்வுகளை

பிறந்த குழந்தைக்கு X Æ A-12 எனப் பெயர் சூட்டிய தந்தை!!! எப்படி உச்சரிப்பது விழிப்பிதுங்கும் நெட்டிசன்கள்???

பிரபல SpaceX நிறுவனத்தின் நிர்வாகியான எலோன் மஸ்க் தனக்கும், தனது தோழியும் பிரபல பாடகியுமான கிரையம்ஸ் க்கும் மே 5 ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு விசித்திரமான குறியீட்டு பெயரை வைத்திருக்கிறார்.

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் சுமார் 3000 பேர்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் சுமார் 1000 பேர்கள் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர்கள்