தளபதி 62 படத்தின் மாஸ் அப்டேட்

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் இந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

'தளபதி 62' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் நடைபெறவுள்ளதாகவும், 20 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் மாஸ் காட்சிகள் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த படம் அதிரடி கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படம் என்றும் செய்திகள் கசிந்துள்ளது.

விஜய்-முருகதாஸ் இணைந்த முந்தைய படமான 'கத்தி' திரைப்படத்தின் முக்கிய காட்சிகளும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதும் இந்த படத்தை பிரமாண்டமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

More News

தயவுசெய்து யாரும் இதை நம்பிவிட வேண்டாம்: பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிரான கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமாக கூறி வருகின்றார்.

இணையத்தில் வைரலாகும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக்

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் த ஜெய் நடித்து வரும் 'ஜருகண்டி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் விசுவாசம்: ரசிகர்களுக்கு கிடைத்த டபுள் சந்தோஷம்

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் டைட்டில் கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டும், இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்

நீதிமன்ற நிகழ்வுகளை நித்யானந்தாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அப்டேட் செய்த சீடர் கைது: நீதிபதி அதிரடி

சென்னை ஐகோர்ட்டில் இன்று நித்யானந்தா குறித்த வழக்கு ஒன்று நடைபெற்று கொண்டிருந்தபோது நித்தியானந்தாவின் சீடர் நரேந்திரன் என்பவர் நித்தியானந்தாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அவ்வப்போது அப்டேட் செய்ததை

சொடக்கு பாடல் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.