அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் தமிழ்த்திரைப்படங்களின் பட்டியல்

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

கோலிவுட் திரையுலகின் நீண்ட வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் புதிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. கடந்த வாரம் 'மெர்க்குரி' படமும் இந்த வாரம் தியா, பக்கா மற்றும் பாடம் ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், புதிய படங்கள் வெளியீட்டுக்கு ஒரு குழு அமைத்துள்ளது என்பதும், அந்த குழு ஒவ்வொரு வாரமும் பரிந்துரை செய்யும் மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த குழுவினர் பரிந்துரையின்படி அடுத்த வாரம் அதாவது மே 4ஆம் தேதி 'இருட்டு அறையில் முரட்டு குத்து, 'அலைப்பேசி’, ’காத்திருப்போர் பட்டியல்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

அதேபோல் மே 11ஆம் தேதி ’இரும்புத்திரை’, ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதற்கிடையில் கீர்த்திசுரேஷின் 'நடிகையர் திலகம்' திரைப்படம் மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தெலுங்கு டப்பிங் என்பதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஒவ்வொரு வாரம் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரையின்படி ரிலீசாகும் படங்கள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையில் எனக்கும் பாலியல் தொல்லை: நடிகை ரெஜினா

நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில நாட்களாகவே கூறி கொண்டு வரும் நிலையில் ரெஜினா தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான நிகழ்வு குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்

வெற்றி பெற்ற இரவில் தோனி, ரெய்னா மகள்கள் செய்தது என்ன தெரியுமா?

நேற்று முன் தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் தோனி மற்றும் ராயுடு அதிரடியில் சென்னை அணி, 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் பதில்

நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரையே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது.

படுக்கைக்கு அழைக்கும் வழக்கும் குறித்து நடிகை அடா சர்மா கூறியது என்ன?

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் குறித்து பல நடிகைகள் தைரியமாக கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் 'சார்லி சாப்ளின் 2' படத்தின் நாயகி அடாசர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்