பிக்பாஸ் 2: பைனல்ஸ்க்கு நாம ரெண்டு பேரும்தான்: சொல்பவர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் அதன் புரமோ வீடியோ இருந்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் 'நாம ரெண்டு பேரும் தான் பைனல்ஸ்க்கு போக போகிறோம்' என்று கூறிய நபர் யார் என்பதை பார்ப்போம்

பிக்பாஸ் வீட்டில் எந்த நேரமும் ஜாலியாக இருப்பவர்கள் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தான். இவர்களை மற்ற போட்டியாளர்கள் இரட்டை பேய்கள் என்று கூட விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் யாருடைய விமர்சனங்களையும் காதில் வாங்கி கொள்ளாமல் இருவரும் இந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திட்டமிடுகின்றனர். நாம ரெண்டு பேரும் விளையாட்டு பிள்ளைங்க என்றும் சீரியஸ் முகமே கிடையாது என்றும் எல்லோரும் யோசித்து வச்சிருக்காங்க. ஆனா டைம் வரும்போது நம்ம சீரியஸ் முகத்தை காண்பிக்க வேண்டும் என்று யாஷிகா கூற, அதற்கு ஐஸ்வர்யா, ''நாம ரெண்டு வாரம் எதுவுமே பண்ண கூடாது, பைனல்ஸ்க்கு நாம ரெண்டு பேரும்தான் போறோம்' என்று கூறுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் அணி அணியாக பிரிய ஆரம்பித்துவிட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை: கணவர் காரணமா?

கடந்த சில மாதங்களாக சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில் நேற்று தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த தேஜஸ்வனி என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து

பிக்பாஸ் 2: ஒருசில மணி நேரத்தில் வெளியேறிய ஓவியா: காரணம் இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுக்கு பின்னர் 17வது நபராக சிறப்பு விருந்தினராக ஓவியா உள்ளே அனுப்பப்பட்டார்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் யார்?

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான முக்கிய விதிகளில் ஒன்று ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது என்பது தெரிந்ததே. அந்த வகையில்

பிக்பாஸ் 2: முதல் தலைவரான ஜனனி, ஏமாற்றத்தில் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்வு செய்யப்பட்டு அவருடைய அறிவுரையின்படி போட்டியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி.

'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 62. இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிடும் நோக்கத்தில் படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.