கடைசி வரை நிறைவேறாமல் போன ஸ்ரீதேவியின் கடைசி ஆசை

  • IndiaGlitz, [Friday,March 02 2018]

நடிகை ஸ்ரீதேவி கடந்த வாரம் துபாயில் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தது அவருடைய குடும்பத்தினர்களை நிலைகுலைய வைத்துள்ளது. குறிப்பாக ஸ்ரீதேவியின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்த போனிகபூருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே கூறலாம்.

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீதேவி தனது குடும்பத்துடன் வாழ்ந்த அந்தேரி வீடு திடீரென தீப்பிடித்தது. இதனை அடுத்து ஸ்ரீதேவியின் குடும்பம் தற்காலிகமாக வேறு வீட்டிற்கு மாறினர். ஸ்ரீதேவி இதுவரை தன்னுடைய கணவரிடம் எதுவும் கேட்டது இல்லையாம். அவர் கேட்ட ஒரே விஷயம், மீண்டும் பழைய அந்தேரி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதுதானாம்.

இதனையடுத்து ஸ்ரீதேவியின் ஆசையை பூர்த்தி செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் போனிகபூர் தன்னுடைய அந்தேரி வீட்டை புதுப்பிக்க தொடங்கினார். வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி ஸ்ரீதேவியின் பிறந்த  நாள் அன்று அந்தேரி வீட்டில் குடியேற அவர் முடிவு செய்திருந்தாராம். இதனை அவர் ஸ்ரீதேவிக்கு கொடுக்கும் பிறந்த நாள் பரிசாக இருக்கும் என்று அவர் முடிவு செய்து அதை சஸ்பென்ஸ் ஆக  வைத்திருந்தாராம். இந்த நிலையில் தான் ஸ்ரீதேவி திடீரென மறைந்துவிட்டார். அந்தேரி வீட்டுக்கு குடிபோக வேண்டும் என்ற அவருடைய கடைசி ஆசை கடைசி  வரை நிறைவேறாமல் போனது போனிகபூருக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கலே! இதுக்கு என்ன அர்த்தம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

சரண் அடைய சொல்லிவிட்டு சதி செய்துவிட்டார்கள்: மதுரை என்கவுண்டர் குறித்து உறவினர்கள் குற்றச்சாட்டு

மதுரையில் நேற்று இருளாண்டி மற்றும் சகுனிகார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட நிலையில் இது திட்டமிட்ட என்கவுண்டர் என்றும்,

விக்ரம் மகன் துருவ் முதல் படம் குறித்த முக்கிய தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விக்ரம் தனது மகன் துருவ்வை சினிமாவில் அறிமுகம் செய்கிறார் என்பதும், அவருடைய முதல் படத்தை இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

மதுரை என்கவுண்டரின் பின்னணி என்ன? திடுக்கிடும் தகவல்

இன்று மாலை மதுரையில் இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டு என்கவுண்டர் செய்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

உன்னையும் மண்ணையும் வென்று வா நீ! ரஜினியின் 'காலா' டீசர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் அதிரடியாக நள்ளிரவு வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது