இறந்த தாத்தா உடலை பிரிட்ஜுக்குள் வைத்த பேரன்....? ஏன் இப்படி செய்தார்....?

  • IndiaGlitz, [Saturday,August 14 2021]


தெலுங்கானா மாநிலத்தில், பர்காலா என்ற இடத்தில் தனது தாத்தாவுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வருபவர் தான் நிகில். தாத்தாவின் பென்ஷன் பணத்தை வைத்து தான் இருவரும் வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்தநிலையில் 93 வயதை கடந்த அவரின் தாத்தாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீடு திரும்பிய முதியவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாத பேரன், தாத்தாவின் உடலை பிரிட்ஜுக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

சில நாட்களில் வீட்டிற்குள் இருந்து நாற்றம் அடிக்க, அண்டை வீட்டார் காவல் துறையினரிடத்தில் புகாரளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் விசாரித்ததில் உண்மைகள் தெரியவந்துள்ளது. இதன்பின் இறுதிச்சடங்கு செய்வதற்கு உண்மையில் பணம் இல்லையா, இல்லை பேரன் தாத்தாவின் பென்சன் பணத்தை வாங்குவதற்கு இப்படி செய்தானா என்ற சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.