ஏதோ, என்னால முடிஞ்சது.. பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்பின் முதல் பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,November 05 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியே வந்தவுடன் பதிவு செய்த முதல் ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று பிரதீப் வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவின், பிரியங்கா, சினேகன் உள்பட பலர் அவரது வெளியேற்றத்தை மன வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ’என்னுடைய பிபி7 கோப்பைகள்’ என ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’ஏதோ என்னால் முடிந்தது, சிம்பிள் ஸ்டார்’ என குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த ஸ்டார், லைக்ஸ், டிஸ்லைக் பட்டன்களை அவர் புகைப்படம் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகி வரும் நிலையில் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு அநியாயம் நேர்ந்து விட்டது, ஆனால் கண்டிப்பாக நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்’ என்று தெரிவித்து வருகின்றனர்.

பிரதீப்பின் இந்த ட்விட்டிற்கு பதிவு செய்துள்ள சனம் ஷெட்டி, ’இந்த கொடூரமான வெளியேற்றத்திற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. யாரும் இங்கு சரியானவர்கள் இல்லை. உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதது! பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் உங்களின் தனித்துவமான விளையாட்டுக்காக நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

பிரதீப் இல்லாத முதல் நாள்.. யாரையும் சேவ் செய்யாத கமல்ஹாசன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி 34 நாள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று 35 வது நாள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும், நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றம்.. நண்பன் கவின் 'நச்' பதிவு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் ஆண்டனி நேற்று எதிர்பாராத வகையில் வெளியேற்றப்பட்டார். அவர் சக போட்டியாளர்களிடம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்.. சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்  ஃபைனல் போட்டியாளர்களாக வரும் தகுதி உடையவர் என்று பிரதீப் ஆண்டனி கருதப்பட்டார்.

காலையில் கைதான ரஞ்சனா நாச்சியாருக்கு கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு..!

நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்து படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பதும் இதையடுத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.

கமல்ஹாசன் மகளுக்கு பூங்கொத்து கொடுத்த பார்த்திபன்.. அடுத்த பட நாயகியா?

உலகநாயகன் கமல்ஹாசன் மகளுக்கு பூங்கொத்து கொடுத்த புகைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்துக்கு பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.