கொரோனா பாதிப்பு நேரத்திலும் படப்பிடிப்பை தொடங்கிய முதல் டீம்

  • IndiaGlitz, [Friday,May 01 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக உலகெங்கிலும் திரைப்பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்தாலும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறித்த தகவல் இன்னும் திரையுலகினர்களுக்கே தெரியவில்லை.

இந்த நிலையில் ஐஸ்லாந்து என்ற தீவு நாடு தங்களது நாட்டில் படப்பிடிப்பை தொடங்க மே 4ஆம் தேதி முதல் அனுமதித்துள்ளது. இந்த நாட்டில் கொரோனாவுக்கு 1760 பேர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் அனைவரும் தற்போது குணமாகிவிட்டனர். இந்த நிலையில் ஐஸ்லாந்தில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் யாவும் மே 4 ஆம் தேதி முதல் நீக்க அரசு முடிவு செய்துள்ளதால் படப்பிடிப்பு தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 'கட்லா' என்ற நெட்பிளிக்ஸ் தொடரின் படப்பிடிப்பு அங்கு தொடங்கவுள்ளது. ஐஸ்லாந்தில் உள்ள உள்ள விக் (Vik) என்ற கிராமத்தில் இந்த வெப்சீரீஸ் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் விரைவில் வெளிநாட்டுக்குழுக்கள் படப்பிடிப்பில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருந்தபோதிலும் இன்னும் யாரும் அந்நாட்டில் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்பதால் ஊரடங்கிற்கு பின் படப்பிடிப்பை தொடங்கும் முதல் டீம், ‘கட்லா’ டீம் தான் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

ஊரடங்கில் கிளம்பிய முதல் பயணிகள் ரயில்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு விமோசனம்

ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கியிருந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு

ராயபுரத்தில் பின்னுக்கு தள்ளிய திருவிக நகர்: மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் சென்னையில் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக சுகாதாரத்துறை திணறி வருகிறது.

உழைப்பால் கிடைக்கும் உயர்வு தாமதமாகலாம், தடைபடாது: கமல்ஹாசனின் மே தின டுவீட்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி மே தின கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் இந்த கொரோனா பரபரப்பிலும் பல நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மே தின கொண்டாட்டம் ஆங்காங்கே

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1793 பேர்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,610 லிருந்து 35,403ஆக அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1793 பேர்கள் கொரோனாவால்

மார்க்கெட்டை மாற்றியும் மாறாத மக்கள்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்தான்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் பழங்கள் மற்றும் பூக்கள் மொத்த விலையிலும் சில்லறை விலையிலும் விற்பனை ஆகி வந்ததால் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது