ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி: எடியூரப்பா போட்ட முதல் உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,May 17 2018]

கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்ததின் பேரில் இன்று காலை பாஜக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பா அம்மாநிலத்தின் 23வது முதல்வராக பதவியேற்று கொண்டார்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஆன பின்னர் தலைமைச்செயலகம் வந்த முதல்வர் எடியூரப்பா போட்ட முதல் கையெழுத்து என்னவெனில் கர்நாடகாவில் ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி என்பதுதான். இதன்படி ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்கள் முழுவதும் தள்ளுபடி ஆகின்றது. முதல்வரின் இந்த முதல் கையெழுத்துக்கு விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல்வர் எடியூரப்பாவின் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் முதல்வரின் இந்த திடீர் முதல் கையெழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றுவோம்: குஷ்புவுக்கு காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை

நடிகை குஷ்பு திமுகவில் இருந்தபோது முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்டவர். அதே நிலை மீண்டும் ஏற்படும் நிலையை குஷ்பு உருவாக்க வேண்டாம்

இந்தியாவுக்கும் கர்நாடகத்திற்கும் இன்று சோக தினம்: முதல்வரின் டுவீட்

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கி வருகிறது.

தனுஷ்-அனிருத் இணையும் படத்தின் அறிவிப்பு எப்போது?

DNA என்ற பெயரில் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகின. 3 படத்தில் தொடங்கிய இந்த கூட்டணி எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி வரை தொடர்ந்தது.

போதை மருந்து கடத்துகிறாரா நயன்தாரா?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரையுலகிற்கு வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம்பர் ஒன் இடத்தை விடாமல் தக்க வைத்து கொண்டிருக்கின்றார்.

தந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவரின் பிளஸ் 2 மதிப்பெண்கள்

தந்தை குடிப்பழக்கத்தால் இம்மாதம் 2ஆம் தேதி நெல்லையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர், பிளஸ் 2 வகுப்புத் தேர்வில் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.